Wednesday 28 August 2013

பயன் தரும் பச்சிலை திருநீற்றுப் பச்சை

பயன் தரும் பச்சிலை திருநீற்றுப் பச்சை

சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்த பச்சிலையின் சாறு எடுத்து சுடு நீரில் கலந்து கொடுக்கலாம், கஷாயம் செய்தும் கொடுக்கலாம். முகம் போன்ற உடல் உறுப்புகளில் விஷத் தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள்.

இந்த விஷப் பருக்களைத் தெரியாமலோ நகத்தாள் கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தையே கூட ஏற்படுத்தி விடும். இத்தகைய விஷப்பருக்கள் தோன்றினால் யாரும் கவலைபடத் தேவையில்லை. திருநீற்றுப்பச்சை இலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேளை தடவினால் போதும் பரு காய்ந்து கொட்டிவிடும்.

திறுநீற்றுப் பச்சையின் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி வியர்வைகளை அகற்றும் வேலைகளையும் செய்கிறது. இதன் இலை உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து சிறுநீரைப்பெருக்கும் தன்மையை கொண்டது. சித்த வைத்தியத்தில் லேகியம், தைலம் தயாரிப்பதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். காது வலி, காதில் சிழ் வடிதல் போன்ற நோய்களுக்கு இதன் இலையை பறித்து சாறு பிழந்து காதுகளில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி, சீழ் வடிதல் குணமாகும்.

தேள் கடித்துவிட்டது என்றால் திருநீற்றுபச்சையின் சாற்றை கடிவாயில் பேட்டால் வலி குணமாகும். ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும்.

இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும். சில சமயம் பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, இந்தச் சாற்றையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.

No comments:

Post a Comment