Thursday 3 October 2013

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47
=======================================
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்


Photo: அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47
=======================================
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய ஜூஸ்கள்

முகத்தில் திடீரென்று பிம்பிள் வர ஆரம்பித்தால், அனைவரும் முதலில் சொல்வது உடலில் வெப்பம் அதிகம் உள்ளது என்று தான். நிறைய மக்கள் இந்த உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுகின்றனர். பொதுவாக ஒருவரின் சாதாரண உடல் வெப்பநிலையானது 98.6 டிகிரி இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் சிறு வித்தியாசத்தில் மாறுபடும். மேலும் இந்த வெப்பநிலையானது காலநிலைக்கு ஏற்றவாறு உடலில் இருக்கும்.

ஆனால் இந்த உடல் வெப்பநிலையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இந்த அதிகப்படியான உடல் வெப்பத்தை வெப்ப அழுத்தம் என்றும் சொல்வார்கள். இத்தகைய உடல் வெப்பமானது அதிகம் இருந்தால், அது தானாக குறையாமல், வயிற்று வலி, உள்ளுறுப்புகளில் பாதிப்பு, பிம்பிள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் வெப்பமானது அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில், அதிகப்படியான வெப்ப காலநிலை, அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும் இத்தகைய உடல் வெப்பத்தை இயற்கை முறையில் தணிக்க முடியும். அதில் முக்கியமாக உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் வெப்பத்தை சீரான முறையில் பராமரிக்க முடியும். அதிலும் தண்ணீரை மட்டும் தான் பருக வேண்டும் என்பதில்லை, குளிர்ச்சி தன்மை அதிகம் நிறைந்த பானங்களை பருகுவதன் மூலமும், உடல் வெப்பத்தை தணிக்க முடியும்.

சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய சில ஜூஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் குறைக்க முடியும்.

சீரகத் தண்ணீர்

சீரகம், உடல் வெப்பத்தை குறைக்கக்கூடிய தன்மை பெற்றவை. எனவே தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை எளிதில் தணிக்கலாம்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடல் வெப்பத்தை தணிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலம் எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

மோர்

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் ஒன்று தான் மோர். இத்தகைய மோர் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இது செரிமான பிரச்சனையையும் சரிசெய்யும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது அதனை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் உள்ள 95% தண்ணீர், உடல் வெப்பத்தை தணித்து, உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்.

இளநீர்

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களுள் மிகவும் சக்தி வாய்ந்த பானம் என்றால் அது இளநீர் தான். எனவே தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இளநீரைப் பருகினால், நாளடைவில் உடல் வெப்பமானது சீராக இருக்கும்.

சர்க்கரை தண்ணீர்

உடலில் தண்ணீர் அதிகம் தேங்கினால், அது பெரும் தொந்தரவாகிவிடும். எனவே அத்தகைய தண்ணீர் தேக்கத்தை தடுக்க, குடிக்கும் தண்ணீரில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். முக்கியமாக உடல் வெப்பம் தணிக்கப்படும்.

புதினா ஜூஸ்

புதினா ஜூஸ் என்பது உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களில் மிகவும் சிறப்பானது. ஏனெனில் புதினா குளிர்ச்சி தன்மையைக் கொண்டிருப்பதால், அது உடல் வெப்பத்தை தணித்து, உடலினுள் இருக்கும் உள்காயங்களை சரிசெய்யும். எனவே எலுமிச்சை ஸூஸ் போட்டு, அதில் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து குடிக்க வேண்டும்.

மாதுளை ஜூஸ்

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால், உடல் வெப்பத்தை விரைவிலேயே குறைக்கலாம்.

குளிர்ச்சியான பால்

கொதிக்க வைக்காத மாட்டுப் பாலை அப்படியே குடித்தால், உடல் வெப்பம் தணிவதோடு, செரிமான பிரச்சனை மற்றும் உடல் வறட்சியும் நீங்கும்.

சோம்பு தண்ணீர்

இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது சோம்பை போட்டு ஊற வைத்து, காலையில் எழுந்து அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பத்தினால் ஏற்படும் முகப்பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளைப் போக்கலாம்.
 (4 photos)
Photo

எலுமிச்சை

எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி, எலுமிச்சை என்ற பெயர் வந்ததெனக் கூறுவர்.

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.

அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.


Photo: எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி, எலுமிச்சை என்ற பெயர் வந்ததெனக் கூறுவர்.

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.

அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.

18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்

18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்

ஓடியாடி வேலை செய்த காலம் போய், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதேப்போல் அத்துடன் உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடுகிறது. இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.

மேலும் இவ்வாறு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அவை இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துவிடும். எனவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட, இயற்கை பொருட்களால் சரிசெய்வதன் மூலம், அதிலிருந்து நிரந்தரத் தீர்வையும் பெறலாம். ஆனால் பலர் இயற்கை பொருட்கள் நல்ல தீர்வைத் தருவதில்லை என்று அதனை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. உடலில் உள்ள பிரச்சனைகளை உடனே சரிசெய்யும் பொருட்கள் எப்போதுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எந்த ஒரு பொருள் மெதுவாக பிரச்சனைகளை சரிசெய்கிறதோ, அது அந்த பிரச்சனையை முற்றிலும் சரிசெய்துவிடும்.

அதுமட்டுமல்லாமல், எந்த வலிக்கு எந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியாக தெரியாததால், பலரால் இயற்கை பொருட்களால் நல்ல பலனை உடனே பெற முடிவதில்லை. இப்போது அப்படி உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை சரிசெய்யும் சில நிவாரணிகளைப் பார்ப்போமா!!!

தேன்: தொண்டை வலி

தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

காபி: ஒற்றை தலைவலி

காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான், உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால், ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு எண்ணெய்: காது வலி

காதுகளில் வலி ஏற்பட்டால், அப்போது பூண்டுகளை தட்டி, கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால், உடனே வலி நீங்கிவிடும்.

கிராம்பு: பல் வலி

சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை, அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு

உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால், பிடிப்புக்கள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

தயிர்: மாதவிடாய் பிடிப்புக்கள்

தயிரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால், அது மாதவிடாயின் போது ஏற்படும் தசைப்பிடிப்புக்களை சரிசெய்யும். அதிலும் அந்த நேரத்தில் தினமும் 2 கப் தயிர் சாப்பிட வேண்டும்.

உப்பு: பாத வலி

நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு, வீக்கமும் குறையும்.

திராட்சை: முதுகு வலி

முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்

மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமானது தணியும்.

செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி

மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்: நெஞ்செரிச்சல்

அசிடிட்டியினால் ஏற்படும் நெஞ்செரிச்சலின் போது, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்ல தண்ணீரில் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.

தக்காளி: கால் பிடிப்பு

இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மீன்கள்: அடிவயிற்று வலி

மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

ப்ளூபெர்ரி: சிறுநீரகப் பாதை தொற்று

சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தால், அத்தகையவர்கள் ப்ளூபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, அந்த பிரச்சனையை சரிசெய்யும்.

ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

அன்னாசி: வாயுத் தொல்லை

வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால், அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

ஆளி விதை: மார்பக வலி

மார்பக வலி ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஆளி விதைகளை உணவில் சேர்த்தால், அது அந்த வலியை கட்டுப்படுத்தும்.

புதினா: தசைப்புண்

அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால், அது வலியைக் குறைத்துவிடும்.
 (17 photos)

Photo

மனச்சோர்வை விரட்டியடிக்கக்கூடிய 10 சிறந்த உணவு வகைகள்

மனச்சோர்வை விரட்டியடிக்கக்கூடிய 10 சிறந்த உணவு வகைகள்

ஒருவரின் நல்வாழ்வுக்கு சவால் விடுக்கும் அல்லது பயத்தைக் கொடுக்கும் எந்த ஒரு விஷயமும் அவருக்கு மனச்சோர்வைக் கொடுக்கக்கூடியதே. ஆனால் இவற்றுள் சில வகை மனச்சோர்வுகள் அவர் தம் வாழ்வை சுவாரஸ்யமாக்கி, கடின உழைப்புக்கு வித்திடக் கூடியதாக இருக்கும். இத்தகைய மனச்சோர்வுகள் கட்டாயமாக தேவையான ஒன்றே. ஆனால் இவையே நம் உடலையும் மனதையும் பாதிக்கும் அளவுக்குச் செல்ல நேரிட்டால் அது நிச்சயம் அபாயகரமானதே.

அதிலும் மனச்சோர்வு உங்கள் இன்ப வாழ்வை குலைக்கின்றதா? பல மணிநேரம் பிடிக்கக்கூடிய உடற்பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முற்பட்டு நீங்கள் சோர்வடைந்து விட்டீர்களா? கவலையை விடுங்கள். மனச்சோர்வைக் குறைப்பதற்கு பல எளிய வழிகள் உள்ளன.

அதில் தியானம் மற்றும் யோகா ஆகியவை மட்டுமே மனச்சோர்விலிருந்து விடுபடச் செய்யும் அருமருந்துகள் என்று எண்ணிவிடாதீர்கள். உணவுமுறைகளின் மூலமும் மன அழுத்தத்தைப் போக்கலாம். அத்தகைய உணவு முறையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள 10 சிறந்த உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் மனச்சோர்வை விரட்டியடித்து மகிழ்ச்சிகரமான வாழ்வைப் பெறலாம்.

பச்சைக் காய்கறிகள்

ப்ராக்கோலி, பரட்டைக் கீரை மற்றும் பசலைக் கீரை போன்றவை மனச்சோர்விலிருந்து உடலை மீட்டெடுக்கக் கூடியவையாகும். ப்ராக்கோலியில், படபடப்பு மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்து, உடல் மற்றும் மனதை சாந்தமடையச் செய்யக்கூடிய வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரை, ஒற்றைத் தலைவலி மற்றும் அயர்ச்சியைப் போக்க உதவுகிறது.

நட்ஸ்

பாதாம் மூளைக்கு நன்மை பயக்கக்கூடியவை. அதோடு மனச்சோர்வுக்கு எதிராகப் போராடுவதற்கும் உதவக்கூடியவை. பாதாமில், மனநிலையை இலகுவாக்கி, மனச்சோர்வுக்கு எதிராகப் போராடக்கூடிய வைட்டமின் பி2, வைட்டமின் இ, மக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளன. வால்நட் மற்றும் பிஸ்தா இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மனச்சோர்வை அண்டவிடாமல் காக்கக் கூடியவையாகும்.

வான்கோழி

உடலில் செரோட்டோனின் அளவை உயர்த்தக்கூடியதான ட்ரிப்டோஃபன் என்ற அமினோ ஆசிட்டை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் வான்கோழி, மனச்சோர்விலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியதாகும்.

ஆப்ரிக்காட்

ஆப்ரிக்காட்டில், தசை நரம்புகளை இயற்கையிலேயே தளர்த்தக்கூடியதும், மனச்சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதுமான மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் மனநிலையை இலகுவாக்கி, மனதை சாந்தப்படுத்தக்கூடிய வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்கள் மனச்சோர்வைக் குறைக்க உதவுகின்றன என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும். மன நிலையை லேசாக்கி, மனச்சோர்வுக்கு எதிராகப் போராடக்கூடிய ஆற்றல் வாய்ந்ததான செரோடோனின் என்ற சுரப்பின் அளவை அதிகரிக்கும் சர்க்கரைச் சத்தும் இதில் காணப்படுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி மனச்சோர்வை குறைக்கவல்லதான வைட்டமின் சி சத்தின் மூலாதாரமாகத் திகழ்வதோடல்லாமல், மனச்சோர்வு மிகுந்த ஒரு சூழலில், மனச்சோர்வை உண்டாக்கும் ஹார்மோனாகிய கார்டிஸோலின் சுரப்பைக் குறைக்க உதவி செய்து, இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் உதவி புரிகின்றன.

மீன்

சூரை, வஞ்சிரம் மற்றும் நெத்திலி போன்ற மீன் வகைகள் அபார சுவை கொண்டவை மட்டுமல்ல. இவை உடலில் சுரக்கக்கூடிய அட்ரினலினை சரியான அளவில் வைத்திருக்க உதவுவதன் மூலம் அமைதியாகவும், பதற்றமின்றியும் வைத்திருக்கவும் உதவக் கூடியவையாகும். மேலும் இது அபரிமிதமான புரதச்சத்தை உடலுக்கு வழங்குவதோடல்லாமல், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பிரதான மூலாதாரமாகவும் திகழும் மீன் வகைகள், செரோட்டோனின் அளவை உயர்த்தி, மன உளைச்சலைக் களைய பேருதவி புரிகின்றன.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ், மனச்சோர்விலிருந்து பாதுகாப்பளித்து, மன நிலையை லேசாக்கக் கூடியவையான ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றின் தலைசிறந்த மூலாதாரமாக விளங்குகின்றது. ஃபோலேட், மனச்சோர்வின் அளவை குறைக்கக் கூடியவையான நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் டோபமைன், செரோடோனின் மற்றும் நோரெபிநெஃப்ரின் போன்றவற்றின் இணைப்பிற்கு மிகவும் முக்கியமானதாக உணவியல் வல்லுநர்களால் நம்பப்படுகிறது.

அவகேடோ மற்றும் வாழைப்பழம்

அவகேடோ மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியதான பொட்டாசியம் சத்து நிரம்பியுள்ளது. இவை ஆற்றலை அதிகரித்து, சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.

பாஸ்தா மற்றும் முழு தானிய அரிசி

சற்றே சிக்கலான மாவுப்பொருளான முழு தானியங்கள் மெதுவாக செரிமானமாவதால், இவை உடலுக்கு நீண்ட நேரத்திற்கு சக்தியளிக்கும். இவை செரோடோனின் சுரப்பை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துவதன் மூலம் உங்களை சாந்தமாகவும், ஆசுவாசமான மனநிலையுடனும் வைத்திருக்க உதவும்.

Photo: மனச்சோர்வை விரட்டியடிக்கக்கூடிய 10 சிறந்த உணவு வகைகள்
 
ஒருவரின் நல்வாழ்வுக்கு சவால் விடுக்கும் அல்லது பயத்தைக் கொடுக்கும் எந்த ஒரு விஷயமும் அவருக்கு மனச்சோர்வைக் கொடுக்கக்கூடியதே. ஆனால் இவற்றுள் சில வகை மனச்சோர்வுகள் அவர் தம் வாழ்வை சுவாரஸ்யமாக்கி, கடின உழைப்புக்கு வித்திடக் கூடியதாக இருக்கும். இத்தகைய மனச்சோர்வுகள் கட்டாயமாக தேவையான ஒன்றே. ஆனால் இவையே நம் உடலையும் மனதையும் பாதிக்கும் அளவுக்குச் செல்ல நேரிட்டால் அது நிச்சயம் அபாயகரமானதே.
 
அதிலும் மனச்சோர்வு உங்கள் இன்ப வாழ்வை குலைக்கின்றதா? பல மணிநேரம் பிடிக்கக்கூடிய உடற்பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முற்பட்டு நீங்கள் சோர்வடைந்து விட்டீர்களா? கவலையை விடுங்கள். மனச்சோர்வைக் குறைப்பதற்கு பல எளிய வழிகள் உள்ளன.

அதில் தியானம் மற்றும் யோகா ஆகியவை மட்டுமே மனச்சோர்விலிருந்து விடுபடச் செய்யும் அருமருந்துகள் என்று எண்ணிவிடாதீர்கள். உணவுமுறைகளின் மூலமும் மன அழுத்தத்தைப் போக்கலாம். அத்தகைய உணவு முறையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள 10 சிறந்த உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் மனச்சோர்வை விரட்டியடித்து மகிழ்ச்சிகரமான வாழ்வைப் பெறலாம்.
 
பச்சைக் காய்கறிகள்
 
ப்ராக்கோலி, பரட்டைக் கீரை மற்றும் பசலைக் கீரை போன்றவை மனச்சோர்விலிருந்து உடலை மீட்டெடுக்கக் கூடியவையாகும். ப்ராக்கோலியில், படபடப்பு மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்து, உடல் மற்றும் மனதை சாந்தமடையச் செய்யக்கூடிய வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரை, ஒற்றைத் தலைவலி மற்றும் அயர்ச்சியைப் போக்க உதவுகிறது.
 
நட்ஸ்
 
பாதாம் மூளைக்கு நன்மை பயக்கக்கூடியவை. அதோடு மனச்சோர்வுக்கு எதிராகப் போராடுவதற்கும் உதவக்கூடியவை. பாதாமில், மனநிலையை இலகுவாக்கி, மனச்சோர்வுக்கு எதிராகப் போராடக்கூடிய வைட்டமின் பி2, வைட்டமின் இ, மக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளன. வால்நட் மற்றும் பிஸ்தா இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மனச்சோர்வை அண்டவிடாமல் காக்கக் கூடியவையாகும்.
  
வான்கோழி
 
உடலில் செரோட்டோனின் அளவை உயர்த்தக்கூடியதான ட்ரிப்டோஃபன் என்ற அமினோ ஆசிட்டை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் வான்கோழி, மனச்சோர்விலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியதாகும்.
  
ஆப்ரிக்காட்
 
ஆப்ரிக்காட்டில், தசை நரம்புகளை இயற்கையிலேயே தளர்த்தக்கூடியதும், மனச்சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதுமான மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் மனநிலையை இலகுவாக்கி, மனதை சாந்தப்படுத்தக்கூடிய வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.
 
டார்க் சாக்லெட்
 
டார்க் சாக்லெட்கள் மனச்சோர்வைக் குறைக்க உதவுகின்றன என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும். மன நிலையை லேசாக்கி, மனச்சோர்வுக்கு எதிராகப் போராடக்கூடிய ஆற்றல் வாய்ந்ததான செரோடோனின் என்ற சுரப்பின் அளவை அதிகரிக்கும் சர்க்கரைச் சத்தும் இதில் காணப்படுகிறது.
 
ஆரஞ்சு
 
ஆரஞ்சு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி மனச்சோர்வை குறைக்கவல்லதான வைட்டமின் சி சத்தின் மூலாதாரமாகத் திகழ்வதோடல்லாமல், மனச்சோர்வு மிகுந்த ஒரு சூழலில், மனச்சோர்வை உண்டாக்கும் ஹார்மோனாகிய கார்டிஸோலின் சுரப்பைக் குறைக்க உதவி செய்து, இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் உதவி புரிகின்றன.
 
மீன்
 
சூரை, வஞ்சிரம் மற்றும் நெத்திலி போன்ற மீன் வகைகள் அபார சுவை கொண்டவை மட்டுமல்ல. இவை உடலில் சுரக்கக்கூடிய அட்ரினலினை சரியான அளவில் வைத்திருக்க உதவுவதன் மூலம் அமைதியாகவும், பதற்றமின்றியும் வைத்திருக்கவும் உதவக் கூடியவையாகும். மேலும் இது அபரிமிதமான புரதச்சத்தை உடலுக்கு வழங்குவதோடல்லாமல், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பிரதான மூலாதாரமாகவும் திகழும் மீன் வகைகள், செரோட்டோனின் அளவை உயர்த்தி, மன உளைச்சலைக் களைய பேருதவி புரிகின்றன.
 
அஸ்பாரகஸ்
 
அஸ்பாரகஸ், மனச்சோர்விலிருந்து பாதுகாப்பளித்து, மன நிலையை லேசாக்கக் கூடியவையான ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றின் தலைசிறந்த மூலாதாரமாக விளங்குகின்றது. ஃபோலேட், மனச்சோர்வின் அளவை குறைக்கக் கூடியவையான நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் டோபமைன், செரோடோனின் மற்றும் நோரெபிநெஃப்ரின் போன்றவற்றின் இணைப்பிற்கு மிகவும் முக்கியமானதாக உணவியல் வல்லுநர்களால் நம்பப்படுகிறது.

அவகேடோ மற்றும் வாழைப்பழம்
 
அவகேடோ மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியதான பொட்டாசியம் சத்து நிரம்பியுள்ளது. இவை ஆற்றலை அதிகரித்து, சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.
 
பாஸ்தா மற்றும் முழு தானிய அரிசி
 
சற்றே சிக்கலான மாவுப்பொருளான முழு தானியங்கள் மெதுவாக செரிமானமாவதால், இவை உடலுக்கு நீண்ட நேரத்திற்கு சக்தியளிக்கும். இவை செரோடோனின் சுரப்பை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துவதன் மூலம் உங்களை சாந்தமாகவும், ஆசுவாசமான மனநிலையுடனும் வைத்திருக்க உதவும்.

மனதை அமைதிப்படுத்த உதவும் 15 உணவுகள்!!!

மனதை அமைதிப்படுத்த உதவும் 15 உணவுகள்!!!

உணவு என்பது உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிறது. ஆனால் அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். உண்ணும் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறுஉண்மையாகும். உணவை கொண்டே பல நோய்களை குணப்படுத்தலாம். அப்படி சில வகை உணவுகளால், மனதை அமைதிப்படுத்த முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா? உண்ணும் உணவு எண்ணத்தையும் உணர்ச்சிகளையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, இப்போது மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும் 15 உணவுகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா...

சாக்லெட் சாக்லெட்களுக்கான உங்கள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள அனான்டமைன் மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் மனம் அமைதி பெற்று மன அழுத்தம் நீங்கும்.


நட்ஸ்

நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இந்த கனிம குறைபாட்டினால், சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை நட்ஸ்களை உண்டால், மனம் அமைதியாக இருக்கும்.

கீரை வகைகள்

பாப்பாய் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கு பிடித்த ஸ்பினாச் என்ற பசலைக் கீரையில் மக்னீசியம் வளமையாக உள்ளது. இது மனதை அதீத செயலாற்றலில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து உணவில் இருந்தால், அதுவும் மனதை சாந்தமாக்கும்.

பாஸ்தா

முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் மக்னீசியம் வளமையாக உள்ளது. இந்த மக்னீசியம் குறைபாடும், மன அழுத்தத்தை அதிகரிக்கும்

கோதுமை பிரட்

முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கோதுமை பிரட்டுகளுக்கும் பாஸ்தாவை போன்ற குணங்கள் உண்டு. அதனால் உணவில் சாண்ட்விச், ரொட்டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால், மன அழுத்தத்தை நீக்கலாம்.

ப்ளூ பெர்ரி

சுவைமிக்க பழமான இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை நீக்கி அமைதியை ஏற்படுத்தும்.

பாதாம்

பாதாமில் ஜிங்க் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால், இதனையும் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்துள்ள இந்த உணவு, மன நிலையை சீராக வைத்து டென்ஷனை குறைக்கும்.

க்ரீன் டீ

உங்களுடைய பொழுதை ஒரு கப் க்ரீன் டீயுடன் தொடங்கினால், அதை விட மன அமைதி வேறு எதிலும் கிடையாது. சொல்லப்போனால் பல பிரச்சனைகளுக்கு அது உடனடி நிவாரணம் அளிக்கிறது

மீன்

சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலம் வளமையாக உள்ளதால், அது மூளைக்கு செலினியம் மற்றும் ட்ரிப்டோபைனை செலுத்தும். அதனால் மனம் அமைதியாக இருக்கும்.

ஓட்ஸ்

உடம்பில் உள்ள செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்க வைப்பதால், அது உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்

பால்

என்ன மறுபடியும் ஆச்சரியமா? ஆம், பாலில் ட்ரிப்டோபைன் இருப்பதால், செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். அது மனதை ஆசுவாசப்படுத்தும்.

ப்ராக்கோலி

பச்சைக்கு மாறுங்கள்! ஏனெனில் ப்ராக்கோலியில் தேவையான அளவு பொட்டாசியம் உள்ளது. அதன் அளவு குறைந்துவிட்டால், சோர்வு ஏற்பட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

கிவி பழம்

ட்ரிப்டோபைனை செரோடோனினாக மாற்றும் திறன் கிவி பழங்களுக்கு உள்ளது. அதனால் அதிர்ச்சியில் இருந்து மூளையை அது காக்கும்.

வாழைப்பழங்கள்

குறைவான நார்ச்சத்தை கொண்ட வாழைப்பழங்கள் வாய்வு இடர்பாட்டை குறைக்கும். அதனால் மனது அமைதி பெற்று, நாள் முழுவதும் மன சோர்வு இல்லாமல் இருக்கலாம்.

சாதம்

கார்போஹைட்ரேட் சாந்தப்படுத்தும் குணத்தை உடையவை. அதனால் சாதம் இதற்கு பெரிதும் துணை புரியும். மேலும் குறைவான கொழுப்பை கொண்ட சாதம் செரிமானத்தையும் சுலபமாக்கும். மேற்கூறிய சில உணவுகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம். அது மனக்கலக்கத்தை குறைக்க உதவும். இதனுடன் சேர்த்து அதிக அளவில் தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். இது உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.